இந்திய நாட்டுப்பற்று -பகுதி 20: இந்திய விடுதலைப்போரின் நிகழ்ச்சிகள் கால வரிசைப்படி ( கி.பி.1600 முதல் கி.பி.1950 வரை )

இந்திய விடுதலைப்போரின் நிகழ்ச்சிகள் கால வரிசைப்படி ( கி.பி.1600 முதல் கி.பி.1950 வரை )

          காந்திய காலத்தில் வெளியான சிறுகதைகள், நாவல்கள் போன்றவையும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றுவதற்கும் அவை மக்களிடையே பரவுவதற்கும் தமிழகத்தில் நிலவிய சூழல்கள் சாதகமாக இருந்தன. முந்தைய வலைப்பதிவில் காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள் பற்றி தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப்போரின் நிகழ்ச்சிகளை கால வரிசைப்படி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம்

  1. கி.பி.1600 முதல் கி.பி.1905 வரை 
  2. கி.பி.1906 முதல் கி.பி.1920 வரை
  3. கி.பி.1921 முதல் கி.பி.1950 வரை 

1.கி.பி.1600 முதல் கி.பி.1905 வரை: 

  • கி.பி.1600 பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்தது.
  • கி.பி.1613 ஜஹாங்கீர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாணிகம் செய்யும் உரிமையை வழங்கினான்.

  • கி.பி.1613 சூரத் என்ற இடத்தில் ஆங்கிலேயர் முதல் வாணிகப் பண்டக சாலையை அமைத்தனர்.
  • கி.பி.1750 ஆங்கிலேயருக்கு வரி தரமறுத்து அவர்களை எதிர்த்துப் போரிட்டான் பூலித்தேவன்.
  • கி.பி.1757 பிளாசிப் போரினால் இந்தியாவின் ஒரு பகுதி ஆங்கிலேயருக்கு அடிமையானது.
  • கி.பி.1767 முதல் மைசூர் போர் நடந்தது.
  • கி.பி.1799 ஆங்கிலேயரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.
  • கி.பி.1801 ஊமைத்துரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தான்.
  • கி.பி.1806 வேலூரில் சிப்பாய்க் கலகம் நடந்தது.
  • கி.பி.1828 பிரம்ம சமாஜம் தோற்றம்.
  • கி.பி.1857 சிப்பாய்க் கலகம் தீவிரமடைந்தது.
  • கி.பி.1858 விக்டோரியா மகாராணியின் பிரகடனம், இந்தியா முழுவதும் இங்கிலாந்தின் கீழ் அடிமையானது.
  • கி.பி.1865 இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் தோற்றம்.
  • கி.பி.1875 ஆரிய சமாஜம் தோற்றம்.
  • கி.பி.1878 மொழிப் பத்திரிக்கைகளின் உரிமைப் பறிமுதல் சட்டம்.
  • கி.பி.1881 சென்னை மாகாண சபையின் தோற்றம்.
  • கி.பி.1883 இல்பர்ட் மசோதா வெளியானது.
  • கி.பி.1885 இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம்.
  • கி.பி.1886 இராமகிருஷ்ண மடம் தோற்றம்.
  • கி.பி.1891 இந்திய காட்டிலாகா தடைச் சட்டம் வெளியிடப்பட்டது.
  • கி.பி.1897 திலகருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
  • கி.பி.1905 வங்கப் பிரிவினை, சுதேசிய இயக்கம், வந்தே மாதர இயக்கம் போன்றவை உருவாதல்.

2.கி.பி.1906 முதல் கி.பி.1920 வரை:

  • கி.பி.1906 தாதாபாய் நௌரோஜி கல்கத்தா காங்கிரஸில் ‘சுயராஜ்ஜியம் வேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
  • கி.பி.1906 முஸ்லீம் லீக் கட்சியின் தோற்றம்.
  • கி.பி.1906 தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசி கப்பல் கம்பெனியை ஆரம்பித்தார்.
  • கி.பி.1907 சூரத் காங்கிரஸில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இருகட்சிகள் தோன்றின.
  • கி.பி.1907 லாலா லஜபதிராய் நாடு கடத்தப்பட்டார்.
  • கி.பி.1908 விபின் சந்திர பாலர் விடுதலையானார்.
  • கி.பி.1908 வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, திலகர் போன்றோர் சிறைத் தண்டனைப் பெற்றனர்.
  • கி.பி.1908 சுப்பிரமணிய பாரதியார் புதுவைக்குத் தப்பிச் சென்றார்.
  • கி.பி.1909 மிண்டோ-மார்லிச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
  • கி.பி.1911 வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டது.
  • கி.பி.1911 ஆஷ் துரை வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்.
  • கி.பி.1912 வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் விடுதலை பெற்றனர்.
  • கி.பி.1914 முதல் உலகப் போர் ஆரம்பம்.
  • கி.பி.1914 செண்பகராமன் ‘எம்டன்’ கப்பலில் போருக்கு வந்தார்.
  • கி.பி.1914 காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகப் போரில் வெற்றியடைந்தார்.
  • கி.பி.1915 காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பினார்.
  • கி.பி.1915 இந்திய பாதுகாப்புச் சட்டம் வெளியானது.
  • கி.பி.1916 தன்னாட்சி இயக்கம் தோற்றம்.
  • கி.பி.1917 சாம்பரான் சத்தியாக்கிரகம்.
  • கி.பி.1917 ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது.
  • கி.பி.1918 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் வெளியிடப்பட்டது.
  • கி.பி.1919 ரௌலட் சட்டமும், ஜாலியன் வாலாபாக் படுகொலையும்.
  • கி.பி.1920 நாகபுரி காங்கிரஸில் ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது. திலகர் மரணம் அடைந்தார்.
  • கி.பி.1920 ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம்.

3.கி.பி.1921 முதல் கி.பி.1950 வரை: 

  • கி.பி.1921 மாப்பிள்ளை மார்க் கலகம், வேல்ஸ் இளவரசர் வருகை.
  • கி.பி.1922 காந்தியடிகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
  • கி.பி.1923 சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம், நாகபுரி கொடிப் போர்.
  • கி.பி.1928 சைமன் கமிசன் எதிர்ப்பு.
  • கி.பி.1929 முழுநிறை விடுதலைத் தீர்மானம் வெளியானது.
  • கி.பி.1930 உப்புச் சத்தியாக்கிரக இயக்கம்.
  • கி.பி.1930 ஜனவரி 26-இல் நாடுமுழுவதும் முதல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
  • கி.பி.1930 முதல் வட்டமேஜை மாநாடு.
  • கி.பி.1931 காந்தி - இர்வின் ஒப்பந்தம்.
  • கி.பி.1931 இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் பங்கு கொண்டார்.
  • கி.பி.1932 வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிவிப்பு, காந்தியடிகளின் உண்ணாவிரதம், ஏர்வாடா ஒப்பந்தம்.
  • கி.பி.1935 இந்திய அரசியல் சட்டம்.
  • கி.பி.1937 மாகாணங்கள் சுயாட்சியைப் பெற்றன.
  • கி.பி.1939 இரண்டாம் உலகப்போர் ஆரம்பம்.
  • கி.பி.1940 தனி நபர் சத்தியாக்கிரகம்
  • கி.பி.1942 கிரிப்ஸ் தூதுக்குழு வருகை
  • கி.பி.1943 சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் உருவாதல்.
  • கி.பி.1945 இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.
  • கி.பி.1945 வேவல் திட்டம்.
  • கி.பி.1946 காபினெட் தூதுக்குழு வருகை, கப்பற்படை வீரர்கள் கலகம் செய்தனர். நேரு இடைக்கால அரசை அமைத்தார்.

  • கி.பி.1947 இந்தியா சுதந்திரம் அடைந்தது.
  • கி.பி.1948 காந்தியடிகள் மரணம் அடைந்தார்.
  • கி.பி.1950 இந்தியா குடியரசு நாடானது.

           அடுத்த வலைப்பதிவில் இந்திய நாட்டுப்பற்று வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்த காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication







கருத்துரையிடுக

0 கருத்துகள்