அற இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் இலக்கியங்களில் நீதி நூல்களுக்கு ஒரு தனியிடம் உண்டு. தமிழருடைய சிந்தனை வளத்தையும், எண்ணப் போக்கையும் உலகத்திற்கு எடுத்தியம்புகின்றன.தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், சமயச் சார்பற்ற தன்மையும் மனித நலக் கோட்பாடு நெறியையும் நெடுங்காலமாகத் தமிழ் நீதி நூல்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றன.
பொருளடக்கம்
- அற இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
- அறம்
- அறநூல்களின் வகைகள்
- மூதுரை
- குறும்பாடல்கள் (Epigrams)
அற இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்:
தமிழில் நீதிப் பாடல்கள், சங்க இலக்கியத்திற்கு பிறகு மிகுதியாகத் தோன்றியுள்ளன. சங்ககாலம், தமிழகத்தின் "வீரயுகம்" எனப் போற்றப்படுகிறது. இந்த வீரயுகத்தை அடுத்து, அறநெறி இலக்கிய காலம் அரும்பியதைக் காணுகின்றோம். இந்த அறநெறி இலக்கிய காலம் அரும்பிய கால கட்டத்திலேயே திருக்குறள் எனும் நீதி இலக்கியம் தமிழில் இயற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.
அறம்:
அறம் எனும் சொல்லாலேயே நீதி உணர்த்தும் பொருளைப் பண்டைத் தமிழர்கள் குறித்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியே அறம் எனும் சொல் நீதி என்று வழங்கப்பட்டது.
அறநூல்களின் வகைகள்:
மூதுரை:
மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும், இயல்புகளையும், துறைகளையும் பற்றி அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த சான்றோர்கள் கண்ட உண்மைகள் பல. அவை எளிமை, தெளிவு, நுட்பம் ஆகியவற்றோடு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இயல்புடையன. அவற்றுள் அரிய அனுபவ உண்மைகள் அறிவுறுத்தப்படும். இன்புறுத்தும் நோக்கம் பெரிதும் இடம்பெறுவது இல்லை. தொல்காப்பியனார், இவ்வகை நீதிப் பாடல்களை முதுமொழி எனும் பெயரால் சுட்டுவர்.
" நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்க வரூஉம
ஏது நுதலிய முதுமொழி யென்ப"
எனும் நூற்பாவால் இதனை அறிகிறோம்.
குறும்பாடல்கள் (Epigrams):
இரண்டாம் வகையை "திட்பவுரை" வாய்ந்த குறும்பாடு எனப் போற்றுவர். முதலில் கிரேக்க மொழியில் இச்சொல் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் என்னும் பொருளில் வழங்கப்பட்டது.
கடுமையின்றி நாகரிகமாய் - நயமாய் கூறப்பட்ட அறிவார்ந்த செய்யுளடிகளை உடையதாகவும், கடுமையின்மை மட்டுமின்றி சொல்லாட்சித் திறமையும், அருளுணர்வும் கொண்ட உரையாகவும் கூறுவர். இதனை இருவகைப்படுத்தலாம். தன்ணுணர்ச்சி பாடல்களான (Lyrics) புறப்பொருள் பாடல்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. தற்சார்பற்ற ( Objective ) கவிதைகள் மற்றொரு வகை.
அகப்பொருள் பற்றியப் பாடல்களில் இத்தகைய நீதிக் கருத்துக்கள் ஒரேவழி இடம்பெறுவது உண்டு.
" நெடிய மொழிதலும் கடிய தேர்தலும்
செல்வம் அன்று; நன்செய் வினைபயனே!
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே"
எக்காலத்திய மனிதனுக்கும் பயன்படக்கூடிய கருத்துக்களை அறிவுரைகளை மேற்கண்ட அடிகள் தெரிவிக்கின்றன.இந்நீதிக் கருத்துக்கள், ஒரு செய்யுளின் - அகப்பொருள் பாடலின் - செம்பாதியாக அமைந்துள்ளன.வெண்பா யாப்பில் அமைந்துள்ள தமிழ் நீதிப் பாடல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
அடுத்த வலைப்பதிவில் தமிழ் நீதி நூல்களில் மூன்றாவது வகையான நீதி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
0 கருத்துகள்