இந்திய நாட்டுப்பற்று -பகுதி 19: காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள்

காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள்

     தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், காந்தியத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், தேசபக்தர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பற்றியும், நாவல்களில் இந்திய நாட்டுப்பற்று பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள்
  • சபேசன் அல்லது சுதந்திர ரஷகன்
  • தியாக பூமி
  • காதலரின் வெற்றி 
  • காதல் உணர்வு
  • தேசிய கவிதைகள்
  • திலகர்
  • நாட்டுப்பற்று விழிப்புணர்வு


காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாவல்கள்:

  காந்தியப் போராட்டங்களில் ஈடுபட்ட சில தேசபக்தர்கள் தங்களுடைய உணர்வுகளை நாவல்களிலும் வெளிப்படுத்தி மக்களை காந்தியத்தில் ஈடுபடுத்த முனைந்துள்ளனர்.

சபேசன் அல்லது சுதந்திர ரஷகன்:

    காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைகளை வி.எஸ்.அரங்கசாமி எழுதியுள்ள ‘சபேசன் அல்லது சுதந்திர ரஷகன்’ என்ற நாவல் வழி அறிய முடிகிறது. காந்தியடிகளின் தீண்டாமை, மதுவிலக்கு, சாதி ஒழிப்பு, கதர் உற்பத்தி போன்ற நிர்மாணத் திட்டங்களை வெளிப்படுத்துவதாக கல்கியின் ‘தியாக பூமி’ வேங்கடரமணியின் ‘தேசபக்தன் கந்தன்’, அகிலனின் ‘பெண்’ சிதம்பர சுப்பிரமணியனின் ‘மண்ணில் தெரியுது’ போன்ற நாவல்கள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.

தியாக பூமி:

    காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச் சத்தியாக்கிரக இயக்கத்தை கல்கி எழுதிய ‘தியாக பூமி’ என்ற நாவலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கு. ராஜவேலு எழுதிய ‘1942’ என்ற நாவலும் தெளிவாக உணர்த்துகின்றன.

காதலரின் வெற்றி:

             சொ.பனையப்ப செட்டியார் 1926-இல் எழுதிய ‘மணிவாசகன்’ என். வேங்கடாசலம், ஆர்.சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து எழுதிய ‘ராஜா ராஜம்’ அல்லது ‘காதலரின் வெற்றி’ போன்ற நாவல்கள் காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. காந்திமதி, காந்தியின் உண்மைச் சீடன் அல்லது லோகநாயகியின் வெற்றி, முருகன் ஓர் உழவன், ஸாரமதி, தியாகக்கொடி, கரட்டூர் ராமு, பலாத்காரம், மண்ணாசை, அன்பு நிலையம் அல்லது வாழும் வகை, நாகம்மாள், மகுடபதி, லலிதா, அலையோசை, கள்வனின் காதலி, அபலையின் கண்ணீர், பார்த்திபன் கனவு, இன்ப நினைவு போன்ற நினைவுகள் நாட்டுப்பற்றை மக்களிடையே வளர்ப்பதாக அமைந்துள்ளன.

காதல் உணர்வு:

    தேசபக்தன் கந்தன், தியாகபூமி, பெண், ராஜா ராஜம் அல்லது காதலரின் வெற்றி, காந்திமதி, நாகம்மாள், கள்வனின் காதலி, அபலையின் கண்ணீர் போன்ற நாவல்கள் காதல் உணர்வு மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

தேசிய கவிதைகள்:

        கு.ராஜவேலு எழுதிய ‘1942’ என்ற நாவல் பாரதியாரின் தேசியக் கவிதைகளை இடையிடையே வெளிப்படுத்தியுள்ளன. தேசபக்தர்களின் தொண்டுகளையும், தேசியக் கவிஞர்களின் சிறப்பையும் வெளிப்படுத்துவதில் தேசிய நாவல்கள் முன்னோடியாக இருந்தன. ‘ஆனந்த மடம்’ என்ற நாவல் தேசிய கவிதைகள் வளர்ச்சியடைவதற்கு அடிப்படையாக இருந்த சக்தி என்று கருதலாம்.

திலகர்:

    

         திலகர் காலத்தில் தமிழகத் தலைவர்கள் பத்திரிகைகள், மேடைப் பேச்சுக்கள் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றனர். அவர்கள் நாட்டின் விடுதலைக்காக உடல், பொருள், உயிர், பட்டம், பதவி ஆகியவற்றை இழக்கவும் தயாராக இருந்தனர். அதனால் அவர்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உருவானது.

நாட்டுப்பற்று விழிப்புணர்வு:

                  காந்திய காலத்தில் தமிழக மக்களிடையே நாடகங்கள் நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றன. நாடக ஆசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், ஆர்மோனியக்காரர்கள் ஆகியோர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களை நாடகங்களில் பாடி மக்களைத் தூண்ட முன் வந்தனர். அக்காலத்தில் வாழ்ந்த தேசியக்கவிஞர்கள் நாடகங்களில் பாடுவதற்கென்றே நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியுள்ளனர். திலகர் காலத்தில் பத்திரிகையிலும், மேடைகளிலும் வெளியான பாடல்கள் காந்திய காலத்தில் மக்களிடையே பேராதரவைப் பெறத் தொடங்கின. அதற்கு நாடகங்களும், பத்திரிகைகளும் உதவியாக இருந்தன.

           காந்திய காலத்தில் வெளியான சிறுகதைகள், நாவல்கள் போன்றவையும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.

     நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றுவதற்கும் அவை மக்களிடையே பரவுவதற்கும் தமிழகத்தில் நிலவிய சூழல்கள் சாதகமாக இருந்தன.

 அடுத்த வலைப்பதிவில் இந்திய விடுதலைப்போரின் நிகழ்ச்சிகளை கால வரிசைப்படி தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication



கருத்துரையிடுக

0 கருத்துகள்