இந்திய நாட்டுப்பற்று - பகுதி 41: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பகுதி - 1

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பகுதி - 1 

முஸ்லீம்கள் பாகிஸ்தான் என்ற தனிநாடு கேட்கும் நிலை உருவாகியது எனவும், இந்து-முஸ்லீம்களிடையே ஏற்பட்ட இனக் கலவரங்கள் இந்துஸ்தானம், பாகிஸ்தானம் என்ற இரண்டு நாடுகளை உருவாக்கின எனவும் , சுதந்திரம் என்பது நமக்கு எளிதில் கிடைக்கும் பொருளல்ல; அதை வேண்டுமானால் உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறக்க வேண்டும் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • ஆனந்த சுதந்திரம்
  • வீர சுதந்திரம்
  • வெற்றி முரசு

ஆனந்த சுதந்திரம்:

சுதந்திர நாட்டின் பெருமையையும், அடிமை நாட்டின் அவல நிலையையும், அடிமையில் வாழும் இந்தியர்களுக்குக் கவிதைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு தேசியக் கவிஞர்களிடம் இருந்ததை அவர்களின் கவிதைகள் மூலம் காணமுடிகிறது.

அடிமையில் வாழ்ந்த மக்களுக்கு தான், சுதந்திரத்தின் அருமை தெரியும். அடிமையில் வாழ்ந்த கவிஞர் தான் சுதந்திரத் திருநாளை சிறப்புடன் பாட முடியும். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பே அடிமையில் வாழ்ந்த பாரதியார்(1),

  “ஆடுவோமே பள்ளு பாடுவோமே

  ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

என்ற பாடலாக வெளிப்படுத்தி அடிமை மக்களுக்குச் சுதந்திரம் நிச்சயம் உண்டு என அவர்களைத் தூண்டுகிறார். அவர் கண்ட கனவு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் -15-ஆம் நாள்தான் நிறைவேறியது. பாரதியாரால் உண்மையான சுதந்திரத் திருநாளைக் கொண்டாட முடியாவிட்டாலும் அவன் கண்ட கனவினை இன்று நனவிலே அடைந்துவிட்டோம் என்று சுதந்திரத் தினத்தன்று கவிதையால் வெளிப்படுத்திக்காட்டுகிறார் ராய. சொக்கலிங்கம்.

வீர சுதந்திரம்:

பாரதிக்குப் பின்வந்த பல கவிஞர்கள் சுதந்திர உணர்வைக் கவிதைகளாக்கி சுதந்திரம் காணத் துடித்தார்கள். அத்துடிப்பு பெரும்பாலான கவிஞர்களுக்கு உயிருடன் இருக்கும்போதே நனவாகியது. இருட்டில் வாழ்ந்த குருடர்கள் பெற்ற ஒளிபோல் அடிமை வாழ்வில் ஊறி அதனை அகற்ற கவிதைகளை வெளிப்படுத்திய கவிஞர்கள் சுதந்திரம் பெற்றவுடன் சுதந்திரத் திருநாளையும் பாட மறக்கவில்லை என்பதை அவர்களுடைய கவிதைகள் புலப்படுத்தியுள்ளன. பாரத மக்கள் சிறப்புடன் வாழ பாரதத்தாய் செய்த தவத்தால் சூரியனாக உதித்ததே சுதந்திரத் திருநாள் என்று கவிமணி வெளிப்படுத்திக்காட்டுகிறார்.

  “வீர சுதந்திரம் வேண்டி நின்றோம், அதை

  வீனுடன் இன்று பெற்றோம் - நல்ல

  ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டோம் - அதை

  அள்ளியே பருகுகின்றோம்”

என்று ராய.சொக்கலிங்கமும், ‘இன்று தணிந்த தெங்கள் சுதந்திர தாகம்’ என்று சுரபியும்(2) பாடல்களால் சுதந்திரத் திருநாளின் பெருமையை வெளிப்படுத்துகின்றனர்.

  “கொண்டாட்டம் கொண்டாட்டம் சுதந்திர தினக் கொண்டாட்டம் - நம்

  நாடெங்கும் இன்று கொண்டாட்டம்”

என்று எஸ்.ஜி. ராமசாமியும்(3),

  “இந்திய நாட்டின் சுதந்திரத் திருநாள்

  இன்பம் யாவையும் இனிமேல் தரும் நாள்”

என்று நாமக்கல் கவிஞரும்(4) சுதந்திரத் திருநாளில் தமது உணர்வுகளைக் கவிதைகளாக்கி மக்களுக்கு உணர்த்தினர். சுதந்திரத் திருநாளின் பெருமையைப் பல உவமைகளுடன் வாலம் என்பவரும், சுருளியாண்டிப் பாவலரும் வெளிப்படுத்தியுள்ளதையும் அறியமுடிகிறது.

 ‘சுதந்திரம் பெறவேண்டும் என்ற துடிப்பு கொண்டிருந்த கவிஞர்கள் சுதந்திரம் பெற்ற திருநாளில் பட்டணங்களில் காணப்படும் விழாக் கோலங்களையும் கண்டு மகிழ்ந்ததை அவர்களின் கவிதைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்திய நாட்டில் உள்ள பட்டணங்கள் எல்லாம் இந்திரலோகம் போல விழாவைக் கொண்டாடியதால், அக்காட்சியைப் பார்க்க பார்க்க பசியும் எடுக்கவில்லை. பத்து தடவை சுற்றினாலும் காலும் வலிக்கவில்லை’ என்று பாடுகிறார் தங்கவேலு.

வெற்றி முரசு:

சுதந்திர நாளில் பாரதத் தாய்க்கு வாழ்த்துக் கூறி வெற்றி கொண்டாட வாரீர் என விசுவநாத சாஸ்திரியும்(5),

  “கொட்டடா கொட்டடா வெற்றி முரசம் கொட்டடா”

என எஸ்.ஜி.ராமசாமியும் சுதந்திரத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்களைத் தூண்டியதைக் காண முடிகிறது. சுதந்திர வெற்றியை வெளிப்படுத்துவதாக ‘ஜே கோசமாலை என்றும் வெற்றி முழக்கப்பாட்டு’ என்ற நூலை 1947-இல் குமாரசிவம் வெளியிட்டு வெற்றியைக் கொண்டாடுகிறார்.

சுதந்திரம் பெற்றதால் இந்திய நாடு அடைந்த பெருமையை சொல்லும்படி சிறுவர்களையும் இயற்கைப் பொருளாகிய புவி, ஒளி, கடல், மறை போன்றவைகளையும் வலியுறுத்தும் மரபு இருந்ததைத் தங்கவேலுவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அடுத்த வலைப்பதிவில் சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



அடிக்குறிப்புகள்

1. பாரதியார் கவிதைகள், ப.181.

2. ஜே.தங்கவேலு, சக்திப்பிறக்குது, ப.24.

3. எஸ்.ஜி. ராமசாமி, பாமரர் பாமலர், ப.21.

4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.272-273.

5. டி.ஆர். விசுவநாதசாஸ்திரி, தேசிய ஜயகீதம், ப.4.


Sponsorship

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob




கருத்துரையிடுக

0 கருத்துகள்