உலகப் பொதுமறை பகுதி 7: அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி - இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைவி (மனைவி) & புதல்வரைப் பெறுதல்

 அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி

     உலகில் எத்தனையோ உயிர்கள் தோன்றி வளர்ந்து அழிகின்றன. அவற்றுள் மனித இனம் மட்டுமே ஆறு அறிவு பெற்றுள்ளது. மனிதன் மட்டுமே கூடி வாழும் இல்வாழ்க்கை நெறியை பயன்படுத்துகின்றான். இனிவரும் பதிவுகளில் இல்வாழ்க்கை, மனைவி, புதல்வரை பெறுதல், அன்புடன் வாழ்தல், விருந்தோம்பல், இனியவை கூறல், நன்றி அறிதல், அடக்கமுடைமை, ஒழுக்கம் உடைமை, பிறர் மனைவியை விரும்பாமை, புறம் கூறாமை, தீவினையை கண்டு அஞ்சுதல், ஈகை, புகழ் ஆகியவைப் பற்றியச் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • இல்வாழ்க்கை 
  • வாழ்க்கைத் துணைவி 
  • புதல்வரைப் பெறுதல்

இல்வாழ்க்கை: 

              இல்வாழ்க்கை என்பது தலைவனும் தலைவியும் கூடி வாழுகின்ற வாழ்க்கை இல்வாழ்க்கை என்று நம் முன்னோர் கருதினர். ஆனால் திருவள்ளுவர் இல்வாழ்க்கையின் சிறப்பைப் பத்து குறள்களில் வெளிப்படுத்தி உள்ளார். குடும்பத்தில் அன்புடன் வாழ்ந்து வருகின்றவர்களுக்கு அறத்தை செய்து வாழ்ந்தால் அதுவே இல்வாழ்க்கையில் பண்பும், அதனால் கிடைக்கும் பயனும் என்கிறார். இயல்பாக இல்லறத்தில் இருந்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவன்தான் எல்லோரையும் விட சிறந்தவன் என்கிறார். இல்வாழ்க்கை என்பதை அறன் என்று கூறுகிறார். இக்கருத்தை 

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 

பிறன் பழிப்பத்தில்லை யாயின் நன்று".

என்ற குறள் மூலம் பிறர் பழிக்காதவாறு அறங்களைச் செய்து வாழ்க்கை நடத்துவதே இல்லறம் என கருதுகிறார் திருவள்ளுவர். 

       இல்வாழ்க்கையில் முறையாக உலக மக்களுக்கு ஏற்ப அன்புடனும், அறிவுடனும், ஆற்றலுடனும் வாழுகின்ற முறையில் வாழ்ந்து மக்களால் போற்றப்படுபவன் தெய்வத்துள் இரண்டறக் கலக்கிறான். முறையான இல்லற ஒழுக்கம் சிறந்த துறவறத்தைப் போன்றதாகும் என்கிறது நான்மணிக்கடிகை. 

வாழ்க்கைத் துணைவி: 

     ஒரு குடும்பம் நடத்துவதற்கு துணையாக இருப்பவள் மனைவி ஆவாள். மனைவி இல்லாமல் எத்தகைய குடும்பமும் இயங்காது. ஆகவேதான் மனைவியை இல்லத்து அரசி என்று புகழ்கிறார்கள். மனைவி என்பவள் குடும்பத்தில் இல்லையாயின் எத்தகைய செல்வங்களைப் பெற்று இருந்தாலும் அந்த வீடு சிறப்புடையதாகாது. மனைவி சிறப்புடையவளாக, நல்லவளாக இருந்தால் குடும்பம் சிறப்பு பெறும் என்பதை 

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 

இல்லவள் மாணக் கடை ".

என்ற குறள் மூலம் ஒரு குடும்பம் சிறப்பாக நடைபெறுவதற்கு மனைவி அவசியம் தேவை என்கிறார். 

    மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செயல்களை உடையனாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கை உடையாள் சிறந்த வாழ்க்கைத் துணை. இம்மையில் இல்வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடித்து வாழும் மகளிர், மறுமையில் வீடு பேற்றுக்குரிய பெருஞ்சிறப்பைப் பெறுவர். புகழுக்குரிய தலைவி அமையப் பெறாதவர், தம்மை இகழ்ந்து பேசுவார்முன் சிங்கம் போன்ற பெருமித நடை பயில இயலாது போகும். 

                புறதெய்வத்தை வழிபடாமல், அகத்தெய்வம் ஆகிய தலைவனையே வழிபடும் தலைவி வேண்டினால் மழையும் பெய்யும் என்கிறார், ஆசிரியர். நான்மணிக்கடிகை இதைப்பற்றிக் கூறும்போது நல்ல பெண்,தெய்வத்தைக் காட்டிலும் மேலாகத் தன் கணவனைத் தொழுவதையே விரும்புவாள் என்பதை 

"....................................... அஃதன்றி

அணங்கல் வணங்கின்று பெண்".

என்ற பாடலால் அறியலாம் 

            கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றாற் பேணி, இருவர் மாட்டும் நன்மையமைந்த புகழ் நீங்காமற் காத்து, சொல் காத்து தளர்ச்சி இல்லாதவளே பெண்ணாவாள். 

புதல்வரைப் பெறுதல்: 

     செல்வங்கள் பல பெற்று இருந்தாலும், குழந்தைச் செல்வமே சிறப்புடையது. பிள்ளைகள் இல்லாமல் வாழ்க்கை நடத்தும் மக்களை மலடி என்பர் சமுதாயத்தினர். பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவானாயின் வினைவயத்தாற் பிறக்கும் பிறப்பேழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையாது. தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வி உடையவனாக்குதல் என்பர். 

           தம்மைவிடத் தம்முடைய மக்கள் பெற்றுள்ள அறிவுச் செல்வம் பேருலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் இனிமை பயப்பது ஆகும். தம் மக்கள் செல்வங்களின் மழலைச் சொல்லைக் கேட்காதவரே, குழலிசையானது இனியது, யாழிசை இனிது என்பர். மக்களின் உடலைத் தொடுதல், பெற்றோரின் உடலுக்கு இன்பம், மேலும் அம்மக்களின் மழலைமொழி கேட்டல், செவிக்கு இன்பம். 

        மகன் தந்தைக்குச் செய்யும் கடமை, இந்த மகனைப் பெற இவன் தந்தை எவ்வகைத் தவம் செய்தானோ எனப் பிறர் கூறச் செய்தல். ஒருவன் பெறும் பேறுகளுள், அரிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதலே சிறப்பு. மற்றவை எல்லாம் சிறப்புடையன அல்ல. 

         தம்முடைய மக்களே தம்முடைய பொருள்களாம். அப்பொருள்களாகிய மக்களோ அவர்தம் உழ்வினையால் உண்டாகும் பயன்தான் என்பதை 

"தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 

தம்தம் விளையான் வரும்".

என்ற குறள் மூலம் அறியலாம்.

       அடுத்த வலைப்பதிவில் அன்பின் வாழ்க்கை பற்றியும், விருந்தினரை உபசரித்தல் பற்றியும், இனியவை பேசுதல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்