இந்திய நாட்டுப்பற்று - பகுதி 31: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 3

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 3

பழித்துக் கூறும் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுகிறார். அன்னியர்களுக்கு அடிமை செய்யமாட்டார்கள் என்பதனை வெளிப்படுத்தப் பாரத தேவியின் அடிமை என்ற பாடலை எழுதியுள்ளார் பாரதியார் என்பது பற்றியும், வந்தேமாதர இயக்கத்தின்போது ஆட்சியை எதிர்த்துச் செயல்படும் பத்திரிக்கைகளையும், பத்திரிக்கை ஆசிரியர்களையும் தண்டித்தனர் ஆங்கிலேயர் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். 

பொருளடக்கம்

  • மாஜினி
  • பிரேஷ்சா மேத்தா
  • பிபின் சந்திரபாலர்

மாஜினி:

வீரரைக் கொண்டாடாத தேசத்தில் வீரம் மங்கிப்போகும் என்பது பாரதியார் கருத்து. எனவே, பாரதியாரை வீரர் புகழ்பாடும் கவி என அழைக்கிறார் சர்க்கரைச் செட்டியார், திலகர், வீர சிவாஜிக்கு விழா நடத்தி இந்துக்களிடையே வீர உணர்வை வெளிப்படுத்தி வந்தார். திலகரிடம் தீவிர பக்தி கொண்ட பாரதியார் வீரபூஜை செய்யவேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 1907-ஆம் ஆண்டு தமிழ் நாடெங்கும் சிவாஜி உற்சவம் நடந்தது. அப்போது சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாரதியார் சிவாஜி தமது வீரர்களுக்குக் கூறிய வீர மொழிகளைச் ‘சத்ரபதி சிவாஜி தன் சைதன்யத்தாருக் கூறியது’ என்ற தலைப்பில் சொற்பொழிவாகவும், கவிதையாகவும் வெளிப்படுத்தினார். திலகரின் தீவிரவாதப் போக்கும், வீர உணர்வும் பாரதியார் வீர உணர்வைத் தூண்டும் கவிதைகளை வெளியிடத் தூண்டுதலாக இருந்ததைக் காணமுடிகிறது.

மாஜினி, கரிபால்டி போன்ற இத்தாலிய தேசபக்தர்களையும், சிவாஜி போன்ற இந்திய தேச பக்தர்களையும் புகழ்ந்து நூல்களை எழுதி மக்களைத் தூண்டும் நிலை அக்கால தேச பக்தர்களிடம் இருந்தது. இத்தாலிய தேசபக்தரான மாஜினியின் வீர உணர்வை வ.உ.சி.யின் வேண்டுகோளுக்கு இணங்கி ‘மாஜினி’(1) என்ற பாடலாகப் பாரதியார் எழுதினார். அயல்நாடுகளில் நடந்த சுதந்திரப்போர் நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்குக் கவிதைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று பாரதியார் விரும்பினார்.

பிரேஷ்சா மேத்தா:

1907-ல் சூரத் காங்கிரஸில் ஏற்பட்ட பூசல் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரு கட்சிகளை உருவாக்கியது. இரு கட்சிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளைப் பாரதியார் கவிதைகளால் வெளிப்படுத்த முன்வந்தார். திலகரின் தீவிரச் செயல்களை மேத்தா என்ற மிதவாதத் தலைவர் பழித்துக் கூறுவதாக ‘மேத்தா திலகருக்குச் சொல்வது’(2) என்ற பாடலைப் பாடி மிதவாதிகளைப் பழித்துக்காட்டி தீவிரவாதத்தை வளர்க்க முயல்கிறார்.

மிதவாதத் தலைவர்கள், தீவிரவாதச் செயல்களையும் தீவிரவாதத் தலைவர்களையும் பழித்துக் கூறும் நிலை அக்காலத்தில் இருந்ததைப் பாரதியாரின் கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன. ‘பிரேஷ்சா மேத்தாவும் சுதேசியமும்’ என்ற தலைப்பில் மிதவாதிகளின் போலி மனப்பான்மையை வெளிப்படுத்திய பாரதியார், மிதவாதிகள் சுதேசியத்தை பழித்துக்கூறும் நிலையை ‘நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்’(3) என்ற பாடலாகவும் வெளிப்படுத்தி அவர்களை இழிவு படுத்துகிறார். இப்பாடல் பாரதியாரின் தீவிரப் போக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

1907-இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பற்றிய செய்திகளைக் ‘காங்கிரஸ் கீதை’ என்ற பாடலாகப் பரமஹம்ச பாலசுப்பிரமணிய பிரம்மஸ்வாமி வெளியிட்டார். காங்கிரசின் செயல்களை மக்களுக்கு அறிவிப்பது கவிஞர்களின் கடமையாக இருந்ததை உணரமுடிகிறது.

பிபின் சந்திரபாலர்:

சூரத் காங்கிரஸில் திலகரின் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாரதியும், வ.உ.சி.யும் இருந்தனர். சூரத் காங்கிரஸிலிருந்து திரும்பிய பாரதியார் திலகரின் தீவிரவாதத்தை வெளிப்படுத்திக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். அந்தநேரத்தில் ஈசுவர ஐயர் எழுதிய ‘ஸ்ரீ திலகர் ஜீவிய சரித்திரம்’ என்ற நூலுக்கு வாழ்த்துச் செய்யுளாக ‘லோக மான்ய பாலகங்காதர திலகர்’(4) என்ற பாடலை எழுதிக்கொடுத்தார். இப்பாடல் மூலம் திலகரின் தீவிரவாதம் பாரதியாரின் கவிதை ஆற்றலைத் தூண்டும் கருவியாக இருந்ததை உணர முடிகிறது.

பிபின் சந்திரரின் பேச்சாற்றலும், பத்திரிகையும் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு அவர் 1907-ஆம் ஆண்டில் சிறைத்தண்டனை பெற காரணமாக அமைந்தது. அவர் சிறையிலிருந்து வெளிவரும் நாள் நாடு முழுவதும் சுயராஜ்ய தினமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் பாரதியாரும் மேளதாளங்களுடன் பெரியகூட்டமும் ஊர்வலமும் நடத்தினார். ‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’(5) என்ற பாடல் அன்று பாரதியாரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது. சுயராஜ்யம் நோக்கமாகக்கொண்டிருந்த பாரதியார் பிபின் சந்திரரின் விடுதலையால் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு ‘சுதந்திரப் பள்ளு’(6) என்ற பாடலைப் பாடி மக்களைத் தூண்ட முயல்கிறார். அக்காலத் தலைவர்களின் செயல்கள் பாரதியின் தேசியக் கவிதைகள் தோன்றுவதற்கும், அவருடைய சுதந்திர உணர்வு வளர்ச்சியடைவதற்கும் தூண்டுதலாக இருந்ததை அறியமுடிகிறது.

பிபின் சந்திரபாலரின் விடுதலையையொட்டி 09.08.1908-இல் திருநெல்வேலியில் தடையை மீறி வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சுயராஜ்யத் தினத்தைக் கொண்டாடினார்கள். அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. பாரதியார் திருநெல்வேலி கோர்ட்டில் இவர்களுக்காக சாட்சியம் சொல்லச் சென்றார். அப்போது கோர்ட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும், கலெக்டர் விஞ்சுவுக்கும் நடந்த உரையாடல்களைக் கண்ட பாரதியார், வ.உ.சி.யின் தேசபக்தியையும் வீர உணர்வையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்த இரண்டு பாடல்களை எழுதினார். அந்தப் பாடல்களை வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும், வக்கீல் சாதுபாதி பந்துலுக்கும் கொடுத்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளையை ஊக்கப்படுத்தவும், தமிழர்களுக்கு வீர உணர்வை ஏற்படுத்தவும் இப்பாடல்களை எழுதினார். ‘கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்கு சொல்லுதல்’ ‘கலெக்டர் விஞ்சுவுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி’(7) என்ற அப்பாடல்கள், வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீர உணர்வையும், சுதந்திர ஆர்வத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இப்பாடல்கள் வ.உ.சிக்கும், பாரதிக்கும் இடையே இருந்த அரசியல் தொடர்பைத் தெளிவாக உணர்த்துகிறது.

அடுத்த வலைப்பதிவில் வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்




அடிக்குறிப்புகள்

1. பாரதியார் கவிதைகள், பக்.214-217.

2. பாரதியார் கவிதைகள், ப.190.

3. பாரதியார் கவிதைகள், ப.191.

4. பாரதியார் கவிதைகள், ப.210.

5. சுத்தானந்த பாரதியார், கவிக்குயில் பாரதியார், ப.37.

6. பாரதியார் கவிதைகள், ப.181.

7. பாரதியார் கவிதைகள், பக்.193-195.




Sponsorship

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

கருத்துரையிடுக

0 கருத்துகள்