நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 3
பழித்துக் கூறும் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுகிறார். அன்னியர்களுக்கு அடிமை செய்யமாட்டார்கள் என்பதனை வெளிப்படுத்தப் பாரத தேவியின் அடிமை என்ற பாடலை எழுதியுள்ளார் பாரதியார் என்பது பற்றியும், வந்தேமாதர இயக்கத்தின்போது ஆட்சியை எதிர்த்துச் செயல்படும் பத்திரிக்கைகளையும், பத்திரிக்கை ஆசிரியர்களையும் தண்டித்தனர் ஆங்கிலேயர் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- மாஜினி
- பிரேஷ்சா மேத்தா
- பிபின் சந்திரபாலர்
மாஜினி:
வீரரைக் கொண்டாடாத தேசத்தில் வீரம் மங்கிப்போகும் என்பது பாரதியார் கருத்து. எனவே, பாரதியாரை வீரர் புகழ்பாடும் கவி என அழைக்கிறார் சர்க்கரைச் செட்டியார், திலகர், வீர சிவாஜிக்கு விழா நடத்தி இந்துக்களிடையே வீர உணர்வை வெளிப்படுத்தி வந்தார். திலகரிடம் தீவிர பக்தி கொண்ட பாரதியார் வீரபூஜை செய்யவேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 1907-ஆம் ஆண்டு தமிழ் நாடெங்கும் சிவாஜி உற்சவம் நடந்தது. அப்போது சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாரதியார் சிவாஜி தமது வீரர்களுக்குக் கூறிய வீர மொழிகளைச் ‘சத்ரபதி சிவாஜி தன் சைதன்யத்தாருக் கூறியது’ என்ற தலைப்பில் சொற்பொழிவாகவும், கவிதையாகவும் வெளிப்படுத்தினார். திலகரின் தீவிரவாதப் போக்கும், வீர உணர்வும் பாரதியார் வீர உணர்வைத் தூண்டும் கவிதைகளை வெளியிடத் தூண்டுதலாக இருந்ததைக் காணமுடிகிறது.
பிரேஷ்சா மேத்தா:
1907-ல் சூரத் காங்கிரஸில் ஏற்பட்ட பூசல் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரு கட்சிகளை உருவாக்கியது. இரு கட்சிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளைப் பாரதியார் கவிதைகளால் வெளிப்படுத்த முன்வந்தார். திலகரின் தீவிரச் செயல்களை மேத்தா என்ற மிதவாதத் தலைவர் பழித்துக் கூறுவதாக ‘மேத்தா திலகருக்குச் சொல்வது’(2) என்ற பாடலைப் பாடி மிதவாதிகளைப் பழித்துக்காட்டி தீவிரவாதத்தை வளர்க்க முயல்கிறார்.
மிதவாதத் தலைவர்கள், தீவிரவாதச் செயல்களையும் தீவிரவாதத் தலைவர்களையும் பழித்துக் கூறும் நிலை அக்காலத்தில் இருந்ததைப் பாரதியாரின் கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன. ‘பிரேஷ்சா மேத்தாவும் சுதேசியமும்’ என்ற தலைப்பில் மிதவாதிகளின் போலி மனப்பான்மையை வெளிப்படுத்திய பாரதியார், மிதவாதிகள் சுதேசியத்தை பழித்துக்கூறும் நிலையை ‘நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்’(3) என்ற பாடலாகவும் வெளிப்படுத்தி அவர்களை இழிவு படுத்துகிறார். இப்பாடல் பாரதியாரின் தீவிரப் போக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பிபின் சந்திரபாலர்:
சூரத் காங்கிரஸில் திலகரின் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாரதியும், வ.உ.சி.யும் இருந்தனர். சூரத் காங்கிரஸிலிருந்து திரும்பிய பாரதியார் திலகரின் தீவிரவாதத்தை வெளிப்படுத்திக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். அந்தநேரத்தில் ஈசுவர ஐயர் எழுதிய ‘ஸ்ரீ திலகர் ஜீவிய சரித்திரம்’ என்ற நூலுக்கு வாழ்த்துச் செய்யுளாக ‘லோக மான்ய பாலகங்காதர திலகர்’(4) என்ற பாடலை எழுதிக்கொடுத்தார். இப்பாடல் மூலம் திலகரின் தீவிரவாதம் பாரதியாரின் கவிதை ஆற்றலைத் தூண்டும் கருவியாக இருந்ததை உணர முடிகிறது.
பிபின் சந்திரபாலரின் விடுதலையையொட்டி 09.08.1908-இல் திருநெல்வேலியில் தடையை மீறி வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சுயராஜ்யத் தினத்தைக் கொண்டாடினார்கள். அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. பாரதியார் திருநெல்வேலி கோர்ட்டில் இவர்களுக்காக சாட்சியம் சொல்லச் சென்றார். அப்போது கோர்ட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும், கலெக்டர் விஞ்சுவுக்கும் நடந்த உரையாடல்களைக் கண்ட பாரதியார், வ.உ.சி.யின் தேசபக்தியையும் வீர உணர்வையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்த இரண்டு பாடல்களை எழுதினார். அந்தப் பாடல்களை வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும், வக்கீல் சாதுபாதி பந்துலுக்கும் கொடுத்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளையை ஊக்கப்படுத்தவும், தமிழர்களுக்கு வீர உணர்வை ஏற்படுத்தவும் இப்பாடல்களை எழுதினார். ‘கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்கு சொல்லுதல்’ ‘கலெக்டர் விஞ்சுவுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி’(7) என்ற அப்பாடல்கள், வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீர உணர்வையும், சுதந்திர ஆர்வத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இப்பாடல்கள் வ.உ.சிக்கும், பாரதிக்கும் இடையே இருந்த அரசியல் தொடர்பைத் தெளிவாக உணர்த்துகிறது.
அடுத்த வலைப்பதிவில் வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.214-217.
5. சுத்தானந்த பாரதியார், கவிக்குயில் பாரதியார், ப.37.
7. பாரதியார் கவிதைகள், பக்.193-195.
Sponsorship
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob



0 கருத்துகள்