About Us

முனைவர் வே.பச்சியப்பன்

   அன்பழகி பச்சியப்பன் ஆகிய நான் தருமபுரி மாவட்டம்,  முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் 1993- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29- ம் நாள் பிறந்தேன். என் தந்தையின் பெயர் முனைவர் வே.பச்சியப்பன், தாயின் பெயர் திருமதி.சி.உமாராணி ஆவர். எனது பள்ளிப்படிப்பை முக்கல்நாயக்கன்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று முடித்த நான் இளங்கலை ஆங்கிலப் பட்டத்தை சேலம்-8, அரசினர் மகளிர் கலைக்கல்லூரியிலும், முதுகலை ஆங்கிலப் பட்டமேற்படிப்பை கோயம்புத்தூர், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் படித்து பட்டத்தைப் பெற்றேன். இளங்கலை கல்வியியல் படிப்பை சங்ககிரி, விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பயின்று முடித்தேன்.
    எனது தந்தை தருமபுரி, அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தனது முனைவர்பட்ட ஆய்வேட்டினை இணையவழியில் பதிவிட வேண்டும் என்பது அவரது விருப்பம். எனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக என்னுடைய முயற்சி மற்றும் திறமையின் மூலம் அவரது முனைவர்பட்ட ஆய்வேட்டினை இணையவழியில் என்னுடைய வலைப்பதிவில் பதிவிடுகிறேன் என்பதை பணிவுடனும், மகிழ்வுடனும் தெரிவித்துக்கொள்கிறேன் 
  நாட்டின் மீது கொள்ளும் காதலை விட சிறந்ததொரு காதலில்லை என்கிறார் பிளாட்டோ. ஒவ்வொரு மனிதனும் தன் தாய்நாட்டின் மீது பற்றுகொள்ளவேண்டும். ஒரு நாடு வளர்ச்சியடைய அந்நாட்டு மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்பு ஒன்றே அந்நாட்டை உயர்வடையச் செய்யும்.
  இந்த வலைப்பதிவில் நாம் மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க, இந்நாட்டுக்காக தன் உடல், பொருள், உயிர் ஆகியவற்றை தியாகம் செய்த தியாகிகளின் வரலாற்றைப் பற்றி பார்ப்போம்